அருவருப்பு, ஆபாச முக்தார் நல்லவர் !
வன்னியரசு - திலகவதி பற்றிப் பேசுவோர் மட்டும் கெட்டவரா !?
தீப்பொறி ஆறுமுகம் தொடங்கி ஆபாச முக்தார் வரை !
திமுகவின் தொடரும் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" !!
--வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
ஒரு பள்ளிக்கூட அறையில் எல்லோரும் சத்தம் போடாம இருங்க என்றால் அங்கே சத்தம் போட்டிருக்கிறார்கள் என்று பொருள். அதனால்தான் அறிஞர் அண்ணா தனது திமுக தொண்டர்களிடம் இருந்திராத "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" ஆகியவற்றின் பெயரால் ஒரு ஒழுங்கு விதியை முன்வைத்தார்.
ஆனால் நடைமுறையில் கடமை என்றால் காசு பார்ப்பது, கண்ணியம் என்றால் பெண்களைப் பாலியல் பண்டமாகப் பார்த்துக் கேவலமாகப் பேசுவது, கட்டுப்பாடு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பது ஆகியவைதான் அண்ணாவுக்குப் பிறகு நாம் பார்த்து ஏமாந்த அந்த "தி மற்றும் திமு கழகங்களின்" முழக்கத்தின் பொருளாக இருக்கிறது.
பெரியார் இராமசாமி வாழ்க, திமுக வாழ்க என்று ஒருவர் சொல்லிவிட்டால் அவர் நல்லவர், அவர் அறிவாளி, அவர் பகுத்தறிவுவாதி, சனாதன எதிர்ப்பாளர்.
அதே மனிதர் திமுக செய்த இந்தச் செயல்கள் தவறு, இராமசாமியின் இந்தப் பேச்சு தவறு என்று கூறிவிட்டாலோ, கூட்டணியை விட்டு வெளியே சென்றுவிட்டாலோ அவர் "சனாதனப் பார்ப்பன சங்கி, பாஜக பி டீம், பெண்கள் தொடர்பான தவறான செயல் செய்பவர், பாலியல் பொறுக்கி....." இப்படி ஒரு பட்டியலையே வாசித்து முடித்துவிட்டுதான் ஓய்வார்கள் இந்த உடன்பிறப்புகள். இது இரண்டு மூன்று தலைமுறையாக இவர்களுக்குள் ஊறிப்போன ஒரு மரபணு வியாதி.
இந்தப் புத்தி எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் பெரியார் இராமசாமியின் குணம் அப்படியே தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம் போல வருகிறது.
பொருந்தாத "கிழமணம்" புரிந்த பெரியார் இராமசாமியின் அந்தத் திருமணத்தை எதிர்க்கிறோம், அதேபோல திகவுக்கு தன்னைத் தலைவராக ஆக்கிவிட்டு கல்லாப்பெட்டி சாவியை மணியம்மையிடம் கொடுத்து விட்டார் இராமசாமி என்பதாலும் திகவில் இருந்து வெளியேறினார்கள் அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும்.
அப்போது அவர்களை வசை பாடி இராமசாமி எழுதிய எழுத்துக்களும், இராமசாமியைக் கேவலமாக அண்ணாவும், கருணாநிதியும் எழுதிய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் படித்தாலோ, கேட்டாலோ வாந்தி வரும்.
ஆக, திராவிட முகமூடித் தலைவர்களின் "கண்ணியம்" என்பது இப்படித்தான் இருந்தது.
அவர்களின் வாரிசுகள் மட்டும் எப்படி இருப்பார்கள் ?
கண்ணியமான, கலை நயத்தோடு, உடல், மனம் ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய தமிழர் கலையான கரகாட்டத்தை ஆபாச இரட்டை அர்த்தம் பேசும் தரம்கெட்ட ஒரு "ரெக்கார்ட் டான்ஸ்" ஆக மாற்றிய கண்ணியவான்கள் அல்லவா இந்தத் திராவிட முகமூடிகள் ?!
"சிவனடியார்" என்பது போல இருந்த "தேவர் அடியார்" எனும் உயர் சொற்களை ஆபாச நடனம் ஆடும் "அழகிகள்" நடனமாக மாற்றி, பொட்டுக்கட்டும் வழக்கத்தைத் தேவர் அடியார் எனும் புனிதமான, இறைவரின் அடியார் எனும் மேன்மை கொண்ட ஒரு இறைப்பணி மீது திணித்து அதனைப் பாலியல் தொழிலாக மாற்றிய பரம்பரை அல்லவா இந்தத் திராவிட முகமூடிகளின் பரம்பரை !?
தமிழர் அல்லாதவர்களின் தீய பழக்கங்கள் இங்கே தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு அடிப்படை வாசலே திராவிட முகமூடி அணிந்தவர்கள்தானே !
பிறகு அவர்களிடம் தமிழர்களின் அறம் எங்கே இருக்கும் ?!
பிராமணர்கள் / பார்ப்பனர்கள் /காங்கிரஸ் கட்சியினரை எதிர்ப்பதற்காக, அவர்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏழை, எளிய அப்பாவித் தமிழர்களை ஈர்ப்பதற்காக ஆபாச, அருவருப்பு பேச்சுக்களை அரசியல் மேடைகளில் அரங்கேற்றம் செய்தவர்களும் இவர்களே.
அன்று காங்கிரஸ்காரர்களை "சனாதன பார்ப்பன சங்கி, பாஜக பி டீம், பெண்கள் தொடர்பான தவறான செயல் செய்பவர், பாலியல் பொறுக்கி....."என்று மேடை தோறும் பேசிய திராவிடத் திருவாளர்கள் அந்தக் காங்கிரஸ் தங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டவுடன், இந்த முழக்க வசனத்தை பாஜக பக்கம் திருப்பினார்கள்.
திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டதால் காங்கிரஸ் கட்சி "நட்ட நடுநிலை, சாதி மதம் ஒழித்த, மதச்சார்பற்ற" கட்சியாக "ஞானஸ்னானம்" பெற்றுவிட்டது.
கடந்த 1999 ம் ஆண்டு பாஜகவுக்கும் "ஞானஸ்னானம்" செய்து வைத்து அந்தக் கட்சியோடும் கூட்டணி வைத்து ஐந்தாண்டுகள் இந்திய அமைச்சர் பதவிகள் வாங்கி சுகித்தது திமுக.
ஆக, பாஜவுடனும் கூட்டணி வைத்தாயிற்று, காங்கிரஸோடும் கூட்டணி வைத்தாயிற்று பிறகு யாரை அப்படி வசை பாடுவது ? இருக்கவே இருக்கிறது நாம் தமிழர் கட்சி. அதனையும் வசை பாடுவோம் அவ்வளவுதானே !?
ஒருவேளை அந்தக் கட்சியும் தங்களுடன் கூட்டணி சேர்ந்தால் அதற்கும் "ஞானஸ்னானம்" செய்து வைத்துவிடுவோம் அவ்வளவுதான்.
இதுதான் திராவிட முகமூடிகளின் விவசாயம்.
1/2...