#EXCLUSIVE #BREAKING_NEWS #JUST_IN
கரும்பு*லிகள் நினைவு நாள் - தமிழர்களின் கோரிக்கை
"பாரிஸ்" நிகழ்வின் தேதியை மாற்றினார் இசைஞானி !
ஜூலை 4 க்குப் பதிலாக ஜூலை 12 ம் தேதி நடைபெறுகிறது !!
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகள் பொன்விழாத் தொடர் நிகழ்வுகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இசைஞானியின் தொடர் இசைச் சூறாவளி சுற்றுப்பயணம் தொடங்குகிறது.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு நிகழ்வாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஜூலை 4 ம் தேதி சனிக்கிழமையன்று இசை நேரடி நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அதே போல ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செப்டம்பர் 26 ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஜூலை 5 ம் தேதி தொடங்கி ஒருவாரம் கரும்பு*லிகள் நினைவு வாரம் அனுசரிக்கப்படுவதாலும், 4 ம் தேதி நிகழ்ச்சி நடைபெற்றால் அடுத்த நாள் ஐந்தாம் தேதி இளையராஜா செய்திகள்தான் பத்திரிகை, ஊடகங்களிலும் மக்கள் மனதிலும் இடம்பெறும், கரும்பு*லிகளின் தியாக வரலாறு மறைக்கப்படும், மறக்கடிக்கப்படும் அபாயம் உள்ளதாகக் கவலைப்பட்டனர் பிரான்ஸ்வாழ் தமிழர்கள்.
இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக மனித உரிமை சங்கத் தலைவர் லோகநாதன் மருதையா (கஜன்) அறிக்கைக் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தச் செய்தியை தமிழ் ஊடகம் வெளியிட்டிருந்தது. அது இசைஞானியின் பார்வைக்கும் எடுத்துச்செல்லப்பட்டது.
இத்தகைய நிலையில் இசைஞானியின் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றுப்பயணப் பட்டியலில் பாரிஸ் நகர நிகழ்வு ஜூலை 12 ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறஉள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள திலீபன் நினைவு நாளான செப்டம்பர் 26 ம் தேதியையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
==========================
தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
ஆபாசமான, அருவருப்பான பின்னூட்டங்களைத் தவிருங்கள்
இணைய வலைதளம் :
tamiloodagam.com
மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com
தமிழ் ஊடகம் பணிகளுக்கு உதவ
razorpay.me/@tamiloodagam எனும் இணைப்பின் மூலம் இயன்ற நிதியை நீங்கள் அளிக்கலாம்.
==========================
#Ilayarajaa #musicworldtour2026 #tamiloodagam