இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?
த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆஜராகாததால் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கரூர் விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசி வருவதாகவும், அதற்கு கோர்ட்டு தடை விதிக்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி 6 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு புறப்பட்டார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் 3 நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இளையராஜா தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜிவி பிரகாஷின் ஹாப்பி ராஜ் படத்தில் இளையராஜாவின் பொதுவாக எம்மனசு தங்கம் பாடலை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'PR' (PR Productions) தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படத்தின் அறிவிப்பு ஒரு பிரத்யேக வீடியோவுடன் வெளியாகியுள்ளது.