Chief Spokes Person - TN BJP , Patron - Employees Provident Fund Union, Tambaram.

Joined April 2011
6,309 Photos and videos
Indian, not an anti-Indian like you. Honest man, not a corrupt person like you. Disciplined man, not a lier like you.
आप कौन हैं?
3
10
48
3,139
Great ! At the age of 116 She walked the hills on foot is amazing.
#WATCH | Tirupati, Andhra Pradesh: Tirumala Tirupati Devasthanam officials arranged a special darshan for 116-year-old Navaneethamma after she walked up to Tirumala on foot.
12
81
1,539
இன்றைய தினமலர் நாளிதழில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிந்தனை.
1
6
29
1,020
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 17/12/1946ம் ஆண்டு டெல்லியில் உள்ள அரசியலமைப்பு அரங்கத்தில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர்.சியாம பிரசாத் முகர்ஜி அவர்கள் பேசியதாவது, “பிரிட்டிஷ் மக்களிடம் இறுதியாக ஒரு முறை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம்: உங்களுடன் நாங்கள் நட்புடன் இருக்க விரும்புகிறோம். இந்த நாட்டில் நீங்கள் வர்த்தகர்களாக உங்கள் பயணத்தைத் தொடங்கினீர்கள். முகலாயர்களிடம் கெஞ்சி கூத்தாடி மன்றாடி எங்கள் தேசத்திற்கு வந்தீர்கள். இந்த நாட்டின் செல்வத்தைச் சுரண்ட விரும்பினீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்குச் சாதகமாக இருந்தது. போலியான ஆவணங்கள், ஏமாற்று வேலை, மோசடி மற்றும் பலாத்காரம் மூலம் — இந்த நாட்டில் உங்கள் ஆட்சியை நிலைநாட்டினீர்கள் என்பது தான் வரலாறேயன்றி இந்த நாட்டு மக்களின் விருப்பதுடனோ, ஒத்துழைப்புடனோ அல்ல. நீங்கள் ஜாதி ரீதியாக தனித் தொகுதிகளை அறிமுகப்படுத்தினீர்கள், இந்திய அரசியலில் மதத்தை அறிமுகப்படுத்தினீர்கள். ஆம், இந்தியர்கள் ஜாதி ரீதியாக தொகுதிகளை அறிமுகப்படுத்தவில்லை, இந்த நாட்டில் உங்கள் ஆட்சியை நீடித்து நிலைநாட்டுவதற்காக நீங்கள்தான் செய்தீர்கள். அதன் மூலம் இந்த நாட்டில் நீங்கள் சுயநலம் கொண்ட தீய சக்திகளை உருவாக்கியுள்ளீர்கள், அவை இப்போது போதுமான அளவு சக்தி பெற்றுவிட்டன, அந்த தீய சக்திகளின் சொந்த விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின்றி இப்போது அழிக்க முடியாத நிலையை எட்டியுள்ளன. இவை அனைத்தையும் மீறி, எதிர்காலத்தில் நீங்களும் இந்தியாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினால், உங்கள் ஒத்துழைப்புக் கரத்தை நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக பிரிட்டிஷ் அரசு தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதோடு அது உங்களின் வேலையுமல்ல. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சொந்த உள்நாட்டுப் பிரச்சினைகள் இருக்கும், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கும் அதன் உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளன, மேலும் அந்த உள்நாட்டுப் பிரச்சினைகள் இறுதியில் இந்த நாட்டு மக்களாலேயே தீர்க்கப்பட வேண்டும்.” இந்தியாவின் சுதந்திரத்திற்கும், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்ட இந்தியாவின் முதல் தொழில் துறை அமைச்சர் டாக்டர் சியாம பிரசாத் முகரஜி அவர்களின் 125 வது பிறந்த தினமான இன்று அவருக்கு என் வணக்கங்களும், மரியாதையையும் உரிதாக்குகிறேன். நாராயணன் திருப்பதி.
3
3
15
1,050
In the Constituent Assembly held at the Constitution hall, New Delhi on 17/12/1946, founder of Bharathiya Jan Sangh Dr.Syama Prasad Mookerjee said, “That we should say to the British people once and for all, We want to remain friendly with you. You started your career in this country as traders. You came here as supplicants before the Great Mughal. You wanted to exploit the wealth of this country. Luck was in your favour. By forgery, fraud and force, you succeeded in establishing-these are all matters of history-your Government in this country, but not with the willing co-operation of the people of this land. You introduced separate electorates, you introduced religion into Indian politics. That was not done by Indians. You did it, only to perpetuate your rule in this country. You have created vested interests in this country which have become powerful enough now and which cannot be destroyed with their own willing co-operation. In spite of all these, if you really want that you and India should remain as friends in the future, we are prepared to accept your hand of co-operation. But for heaven’s sake, it is not the business of the British Government to interfere so far as the domestic problems of India are concerned. Every country will have its own domestic problems and unfortunately India has her domestic problems too, and those domestic problems must ultimately be settled by the people of this country.” On his 125th Anniversary today I pay my respects and salutes to Dr.Syama Prasad Mookherjee for his role in building the Indian Nation as the first Industries Minister.
3
14
808
The statement by Tamil Nadu Minister Vanniyarasu @VanniTamizhVCK today that he is ready to even resign his ministerial post 'for the sovereignty of Tamil Nadu' is an anti-national and illegal act. The Constitution of India clearly states that ‘India alone is a sovereign nation’. India has created states only for administrative convenience and has not granted any sovereignty to the states. When assuming office, state ministers take an oath before the Governor under the Third Schedule and Article 164(3) of the Constitution, pledging that they will "preserve the sovereignty and integrity of India." No state has separate sovereignty. States only have the right to autonomy and state rights. Despite this, Minister Vanniyarasu’s statement today referring to the 'sovereignty of Tamil Nadu' is nothing but blatant separatism. Furthermore, his remarks challenging the very sovereignty of India constitute a serious legal offence. It is highly condemnable that a minister has spoken in this manner. It is the duty and responsibility of @CMOTamilnadu Chief Minister Thiru. Joseph Vijay @TVKVijayHQ to immediately remove him from his ministry and take strict action against him for violating the oath he took as a minister under the Constitution of India. I also urge the honourable Governor @lokbhavan_tn @ to take strong action against Vanniyarasu for making statements that undermine India's sovereignty and pave the way for separatism. Narayanan Thirupathy, Chief Spokesperson, Bharatiya Janata Party, Tamil Nadu.
23
49
231
31,671
'தமிழ்நாட்டின் இறையாண்மைக்காக' அமைச்சர் பதவியையும் துறக்க தயார் என்று இன்று தமிழக அமைச்சர் வன்னியரசு @VanniTamizhVCK பேசியிருப்பது தேச விரோத, மற்றும் சட்ட விரோத செயலாகும். இந்திய அரசியலமைப்பு சட்டமானது, இந்தியா மட்டுமே இறையாண்மை கொண்ட நாடு என்று தெளிவாக சொல்கிறது. இந்தியா தன் நிர்வாக வசதிக்காக மாநிலங்களை உருவாக்கியுள்ளனவே தவிர, மாநிலங்களுக்கென இறையாண்மை எதுவும் வழங்கவில்லை. மாநில அமைச்சர்களும் பதவியேற்கும் போது 'இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டைக் பேணிகாப்பேன்' என்று அரசியலைமைப்பு சட்டத்தின் மூன்றாவது அட்டவணை மற்றும் சட்டப்பிரிவு 164(3)ன் கீழ் மாநில ஆளுநரிடம் உறுதி மொழி எடுத்து பதவி பிராமணம் செய்து கொள்கின்றனர். எந்த ஒரு மாநிலத்திற்கும் தனி இறையாண்மை கிடையாது. மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் மற்றும் மாநில உரிமைகளே உண்டு. அப்படியிருக்கையில். இன்று அமைச்சர் வன்னியரசு 'தமிழ்நாட்டின் இறையாண்மை' என்று பேசியிருப்பது அப்பட்டமான பிரிவினைவாதமேயன்றி வேறல்ல. மேலும், இந்தியாவின் இறையாண்மைக்கே சவால் விடும் போக்கில் வன்னியரசு பேசியிருப்பது சட்ட ரீதியாக பெரும் குற்றமாகும். ஒரு அமைச்சரே இப்படி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்வதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சராக உறுதி மொழி எடுத்ததை மீறி செயல்பட்டுள்ளார் என்ற குற்றத்திற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது @CMOTamilnadu முதலமைச்சர் திரு. ஜோஸப் விஜய் @TVKVijayHQ அவர்களின் கடமை மற்றும் பொறுப்பு. அதே போல் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் , பிரிவினைவாதத்திற்க்கு வழிவகுக்கும் வகையில் பேசியதற்கு வன்னியரசு மீது ஆளுநர் @lokbhavan_tn அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கிறேன். நாராயணன் திருப்பதி, தலைமை செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.
12
26
96
6,148
'பாட்டிலுக்கு பத்து ரூபாய்' என்று பாடி விட்டு, ஆட்சிக்கு வந்தால் 'பத்து ருபாய்' லஞ்சத்தை ஒழிப்பேன் என்று கூறிய விஜய் அவர்களே, இதோ பத்து ரூபாய் என்பது இருபது ரூபாயாக உயர்ந்து விட்டதே? ஓ! அதை தான் சொன்னீர்களோ? பத்து ரூபாயை ஒழித்து விட்டு இருபது ரூபாயாக உயர்த்தி விட்டீர்களே!! பெரும் சாதனை!
பாட்டிலுக்கு 10 ரூபாய் இல்ல இப்போ ரூ.20.. ”எவ்ளோ கூலிங்கா கொடுத்துருக்கோம் அதை பாருப்பா”... தட்டிக்கேட்டவருக்கு ஷாக் கொடுத்த டாஸ்மாக் பணியாளரின் பதில்.! #Tambaram | #Tasmac | #People | #PolimerNews
5
36
94
2,429
"மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையை அணுகலாம், கோரிக்கைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என்று சொன்னது தேர்ந்தேடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும்; ஆளுநரின் அத்துமீறலை தடுத்து நிறுத்த குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்" : இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர், வீரபாண்டியன். மேற்கு வங்காளத்தில் 32 ஆண்டுகள் அடக்கு முறை ஆட்சி நடத்திய கம்யூனிஸ்டுகள், இப்போதும் நக்ஸல் சிந்தனையோடே இருப்பது தான் பிரச்சினையே. ஆளுநர்கள் மற்றும் குடியரசுத்தலைவர் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் மற்றும் பிரதிநித்துவங்களை பெறுவது வழக்கமே. மேலும், ஆளுநர் இதை சொல்லி விட்டு "தகுந்த பிரச்சினைகளை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று நடவடிக்கை கோருவேன்" என்று குறிப்பிட்டதை மறைத்து வீரபாண்டியனின் பேசியுள்ளது அவரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஆளுநரின் இந்த பேச்சு அவரின் மாண்பை, உயர்ந்த பண்பை உணர்த்துகிறது. அதை பாராட்டாமல் விமர்சிப்பதும் ஆளுநரை குறை சொல்வதும் கம்யூனிஸ்டுகளின் மக்களாட்சிக்கு எதிரான நிலையை தெளிவுபடுத்துகிறது. நாராயணன் திருப்பதி, தலைமை செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.
8
40
3,522
"இஸ்லாமியர்களுக்கும், கழகத்துக்குமான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது, யார் என்ன சொன்னாலும், எந்த அவதூறுகளை பரப்பினாலும் இஸ்லாமியர்களுக்கும் கழகம் ஒரு காவல் அரணாக நிச்சயம் நிற்கும்" : உதயநிதி ஸ்டாலின். ஹிந்துக்களுக்கும், கழகத்துக்குமான பிளவை யார் நினைத்தாலும் சேர்க்க முடியாது. யார் என்ன சொன்னாலும், எவ்வளவு பசப்பு வார்த்தைகளை கூறினாலும், ஹிந்துக்களுக்கு கழகம் எப்போதும் எதிராக/இடையூறாக தான் நிற்கும். நாராயணன் திருப்பதி.
3
19
109
3,368
'பாப்பான்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்று பேசியிருக்கிறார் திமுக வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. தான் அப்படி தான் சொன்னேன் என்பதை உறுதி செய்வதற்காக மீண்டும் தன் குரல் சரியில்லை, அதனால் வேறு மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. வேறு எந்த ஜாதியையாவது இப்படி சொல்லி விட்டு ஆர் எஸ் பாரதியோ அல்லது வேறு திமுக வினரோ சுதந்திரமாக இருந்து விட முடியுமா? பிராமணர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்கிற எண்ணத்தில் இந்த 'திராவிட மாடல் கோழைகள்' இப்படி பேசுகிறார்கள். ஆள் வளர்ந்த அளவிற்கு ஆர் எஸ் பாரதிக்கு அறிவு வளரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இராஜாஜி என்ற பிராமணன் போட்ட பிச்சை தான் திராவிட மாடல் ஆட்சி என்பதை ஆர் எஸ் பாரதி உணர வேண்டும். நாராயணன் திருப்பதி.
40
72
347
16,606
"மும்மொழிக் கொள்கை என்பது மிக மிக ஆபத்தானது" : காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர். மும்மொழிக்கொள்கையை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சி தான். கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இப்படி பேசுவது தான் காங்கிரஸ் கட்சியினரின் வழக்கம்.
10
28
147
3,897
எது உண்மை @manickamtagore அவர்களே, நீங்களும், உங்கள் கட்சியும் @INCIndia வெட்கப்படவேண்டிய நிகழ்வை நடத்தியவர் @Viswanathan_INC . பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டிய அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், இப்படி அருவெறுக்கத்தக்க வகையில் பெண் குழந்தைகளிடம் நடந்து கொண்டதை உலகமே பார்த்து அதிர்ச்சியுற்றது. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டிய விஸ்வநாதன் அவர்களும், அவரை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பிருக்கிற நீங்களும், நடந்த தவறுக்கு “ஜாதியை” சொல்லி தப்பிக்க பார்ப்பது நடந்த அவலத்தை விட கொடூரமானது. மேலும், ‘தாழ்த்தப்பட்ட சமூகம்’ என்று குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது தாங்கள் தான். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற் வார்த்தை குறித்து சில தினங்களுக்கு முன்னர் சட்டசபையில் நடைபெற்ற விவாதங்களை பாருங்கள். இப்படி சொல்லியே அந்த சமூகத்தை எவ்வளவு காலம் அவமானப்படுத்திக் கொண்டே இருக்கும் காங்கிரஸ் கட்சி? அரசியல் காரணங்களுக்காக ஜாதிகளை பிளவுபடுத்திய காங்கிரஸ் கட்சிக்கு ஜாதிகளை ஒருங்கிணைத்து அரவணைக்கும் ஆர் எஸ் எஸ் குறித்து விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என்பதை உணருங்கள். @NainarBJP
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் உண்மைக்குப் புறம்பாகத் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாளினை முன்னிட்டு திரு. பெ.விஸ்வநாதன் அவரது சொந்தத் தொகுதியில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும், குழந்தைகளுக்குான யோகா நிகழ்ச்சியையும், தன்னுடைய குழந்தைகளாகக் கருதி வாஞ்சையோடு விழா நடத்தியதைக் குறை கூறுவது "காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்" என்கிற கதையாக இருக்கிறது. மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்கல்வி அமைச்சராக இருக்கக் கூடாது என்கிற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் போதகர் திரு கேசவநாயகம் எழுதிக் கொடுத்ததை எடுத்துக்கொண்டுபோய் ஆளுநரிடம் அளித்த குற்றச்சாட்டினால் உயர்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதிக்கமே மேலோங்க வேண்டும் என்கிற சித்தாந்தத்தையே இக்குற்றச்சாட்டு நிரூபிக்கிறது. திரு பெ. விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் அளிக்கப்பட்ட அறிக்கை ஆர்.எஸ்.எஸ்.ஸின் வெறுப்பரசியலையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்பதே உண்மையாகும். @Viswanathan_INC
6
13
64
5,415
தன் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமரை, முதல்வரை ஒருமையில் தரக்குறைவாக பேசியதை கண்டிக்காமல், சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை கண்டிக்கும் தலைவர், மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் ஊழல் செய்த வழக்கில் காவல்துறை தேடுவதை அறிந்து தலை மறைவாக ஓடிப் போய் மறைந்து கொண்டிருப்பதை கண்டிக்க முடியாத தலைவர் எப்படி ஒரு கட்சியின் தலைவராக மக்களின் நம்பிக்கையை பெற முடியும்? நாராயணன் திருப்பதி.
9
29
147
7,239
அசைக்க முடியாத, சக்தி வாய்ந்த நபராக சென்ற ஆட்சியில் வலம் வந்து கொண்டிருந்த செந்தில் பாலாஜி தற்போது ஓடி ஒளிந்து கொண்டிருப்பது தான் விதியின் விளையாட்டு. அன்று அமைச்சராக இருந்த போது அதிகாரத்தின் உச்சாணி கொம்பில் அமர்ந்து கோலோச்சி கொண்டிருந்த செந்தில் பாலாஜி இன்று சட்டசபை உறுப்பினராக இருந்தும் கூட நீதிக்கு கட்டுப்பட்டு காவல்துறையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாத நிலையில் கண்காணா இடத்திற்கு சென்று மறைந்து வாழ்வது வெட்கக்கேடு. ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...? என்ற கண்ணதாசனின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. நாராயணன் திருப்பதி.
44
111
622
19,809
இன்றைய தினமரில்…….
4
5
36
1,405